Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலட்சுமி: சிபிஐயிடம் போலீஸ் குடும்பங்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiஜெயலட்சுமியின் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினர் சிபிஐஅதிகாரிகளிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

ஜெயலட்சுமி, அவரது தந்தை அழகிரிசாமி, சகோதரர் சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ள சிபிஐஅதிகாரிகள் அடுத்த கட்டமாக ஜெயலட்சுமி குற்றம் சாட்டியுள்ள காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளனர்.

இந் நிலையில் ஜெயலட்சுமி விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள சப்--இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டுகண்ணன், நகைக்கடை அதிபர் முருகவேல் ஆகியோரின் குடும்பத்தினர் தனித்தனியாக ஜெயலட்சுமியின்மோசடிகள் குறித்து சிபிஐயிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதேபோல் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி ஆகியோரது குடும்பத்தினரும் சிபிஐயிடம் புகார்மனுக்களை கொடுக்க இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சிபிஐ அதிகாரிகளிடம் சங்கரன்கோவிலை சேர்ந்த நூல் மில் அதிபர் பிரகாஷ் மூர்த்தி என்பவர்ஜெயலட்சுமி குடும்பத்தினர் மீது மோசடி புகார் செய்தார். அவரது புகாரைப் பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள்பின்னர் விசாரணைக்கு அழைப்பதாக தெரிவித்தனர்.

அதேபோல் இன்று திருநெல்வேலியைச் சேர்ந்த 3 பேர் ஜெயலட்சுமி மீது புகார் கொடுக்க மனுவுடன் சிபிஐஅலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அவர்களது புகாரை சிபிஐ அதிகாரிகள் வாங்கவில்லை. பெயர் மற்றும்முகவரியை மட்டும் குறித்துக் கொண்டு அனுப்பி விட்டதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+