சென்னை மாநகராட்சி: திமுக கவுன்சிலர்கள் வெளியேற்றம்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுகதலைவர் சி.வி.மலையன் எழுந்து, கடந்த 3 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியால் நிறைவேற்றப்படாததிட்டங்களை பட்டியலிட்டு, இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதாக கூறி விட்டுவெளியேறினார்.
பின்னர் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பேசுகையில், திமுக தலைவர் மலையன் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு உத்ததரவிட்டார். இதைக் கேட்டதும் திமுக உறுப்பினர்கள் மீண்டும் சபைக்குள் வந்தனர்.
கராத்தே தியாகராஜனின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை எதிர்த்துஅதிமுக உறுப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் கடுமையாக வாதிட்டதால் அங்குஎன்ன பேசப்படுகிறது என்பதே புரியவில்லை.
இந் நிலையில் சில உறுப்பினர்கள் கைகலப்பில் இறங்கவும் முயன்றனர். இதனால், திமுக உறுப்பினர்களைசபையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டார். இதையடுத்துமலையன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு வந்துவிட்டனர்.
இந் நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து, காமராஜர் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்ட மத்தியஅரசைப் பாராட்டி சபையில் தீர்மானம் கொண்டு வராததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறினர்.