ஜெயலட்சுமியின் ஆந்திரா மோசடி: ஏட்டு கண்ணன்
மதுரை:-
சிவகாசி ஜெயலட்சுமி ஆந்திராவிலும் மோசடி செய்து பணம் சம்பாதித்தாக திடீர் நகர் போலீஸ் ஏட்டு கண்ணன்கூறினார்.
ஆஜெயலட்சுமியின் குடும்பத்தினரை கடத்திய வழக்கில் கைதான சப்--இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன்,கோவை நகைப்பட்டறை அதிபர் முருகவேல் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
நிபந்தனையின்படி சிவகாசி அருகே உள்ள மாரனேரி காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட 3 பேரும்வந்தனர். கையெழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்த கண்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,
நாங்கள் ஜெயலட்சுமியின் குடும்பத்தினரை கடத்தவும் இல்லை; வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதைசெய்யவும் இல்லை. எங்கள் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. விரைவில் இதை நிரூபிப்போம்.
ஜெயலட்சுமியின் உறவினர்கள் ஜெயலட்சுமி பெயரை கூறி தமிழ்நாட்டில் பல பஞ்சு வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.
ஜெயலட்சுமி குடும்பத்தினர் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவில் உள்ள பஞ்சு வியாபாரிகளிடமும்பணமோசடி செய்துள்ளனர். இது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, உண்மைகளை நாட்டுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications