சூயஸ், பனாமா கால்வாய்களை பார்வையிடும் பாலு
சென்னை:
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்த உலகப் புகழ் பெற்ற சூயஸ் மற்றும்பனாமா கால்வாய்களைப் பார்வையிடச் சென்றுள்ளார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு. அவருடன்உயர் மட்ட அதிகாரிகள், நிபுணர்கள் கொண்ட குழுவும் சென்றுள்ளது.
ரூ. 2,000 கோடி மதிப்பில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை சிறப்பாக உருவாக்கும் வகையில்,மனித உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட சூயஸ் மற்றும் பனாமா கால்வாய்களை நேரில் பார்த்து ஆய்வு செய்ய உயர் நிலைக்குழுவுடன் சென்றுள்ளார் பாலு.
டெல்லியிலிருந்து துபாய் வழியாக இக் குழு எகிப்து சென்று சூயஸ் கால்வாயை பார்வையிடும் இக் குழு, அங்கிருந்து பனாமாசென்று பனாமா கால்வாயை பார்வையிடுகிறது.
பின்னர் பனாமா நாட்டின் துணை அதிபரும், பனாமா கால்வாய் பொறுப்பு அமைச்சருமான ரூபன் அரோசிமனாவையும் பாலுசந்தித்துப் பேசுகிறார்.