For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தரம்சிங்குடன் ஜெ. பேச இளங்கோவன் யோசனை

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

பரம்பிக்குளம்- ஆழியாறு பிரச்சினையைத் தீர்க்க கேரள முதல்வருடன் பேச்சு நடத்தியது போல், காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண கர்நாடக முதல்வர் தரம்சிங்குடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னையில் மோட்டார் உதிரிபாகங்கள் செய்வதற்கான ஒருங்கிணைப்பு தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.50 கோடி செலவிட உள்ளது.

15 நாள்களுக்கு ஒருமுறை, சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வதால் நாமும் விலைகளை மாற்றிஅமைக்கும் சூழ்நிலை உள்ளது.

நான்குநேரியில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு மத்திய அரசுஉதவி செய்யும்.

தமிழக வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க முதல்வர் அழைப்பு விடுத்தால் அவரைச் சந்திக்கத் தயாராக உள்ளேன்.

மழை பெய்வதற்கு முன்பே மத்திய குழுவினரை அழைத்து வந்து வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட்டு இருந்தால் தமிழகத்திற்குகூடுதலாக மத்திய அரசின் வறட்சி நிவாரண நிதி கிடைத்து இருக்கும்.

பரம்பிக்குளம்-- ஆழியாறு நீர் பகிர்வுப் பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வருடன் ஜெயலலிதா பேச்சு நடத்தியதுவரவேற்கத்தக்கது. இதுபோன்று காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண கர்நாடக, புதுவை முதல்வர்களுடன் பேச வேண்டும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X