போலீசுக்கு ஆதரவாய் கதிரவன் மீண்டும் பல்டி
காஞ்சிபுரம்:
முதலில் சங்கராச்சாரியாருக்கு எதிராக வாக்குமூலம் தந்துவிட்டு, பின்னர் போலீசார் துன்புறுத்தியதால் அப்படிச் சொன்னேன் என்று பல்டிஅடித்த கதிரவன், மீண்டும் ஒரு முறை பல்டி அடித்துள்ளான். போலீசார் தன்னை துன்புறுத்தவில்லை என்று இப்போது கூறியுள்ளான்.
சங்கரராமனைக் கொல்ல படையை ஏவிவிட்ட அப்புவிடம் டிரைவராகவும் கூலி வேலையாளாகவும் இருந்தவன் கதிரவன்.
இவன் முதலில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் தாமோதரன் முன் 19ம் தேதி ஆஜராகி, பூட்டப்பட்ட அறையில் ரகசிய வாக்குமூலம் தந்தான்.அப்போது, சங்கராச்சாரியாரின் உத்தரவின்பேரில் கொலையாளிகளை அப்பு அனுப்பியததிாகவும், தானே முன்னின்று கொலையாளிகளுக்குபண பட்டுவாடா செய்ததாகவும் கூறியிருந்தான்.
சுமார் 2 மணி நேரம் இவ்வாறு அப்ரூவராக மாறி வாக்குமூலம் தந்தான்.
இந் நிலையில் 24ம் தேதி காவல் நீட்டிப்புக்காக மாஜிஸ்திரேட் உத்தமராஜன் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, பல்டி அடித்தான் கதிரவன்.
தன்னை போலீஸார் 5 நாட்களாக தொடர்ந்து விதத்திலும் கடுமையாக சித்திரவதை செய்ததால் தான் சங்கராச்சாரியாருக்கும் அப்புவுக்கும்எதிராக வாக்குமூலம் தந்ததாகவும், அப்படி சொல்லச் சொல்லி போலீசார் தன்னை அடித்து, உதைத்தாகவும் கூறினான்.
இதனால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். முக்கிய சாட்சியின் பல்டியால் வழக்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக அரசும் கருதியது.
இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் கதிரவன் மீது பண பட்டுவாடா செய்ததாக வழக்கு உள்ளதால், நேற்றுசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவன் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரியிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் தந்த கதிரவன், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை,அடிக்கவில்லை என்றான்.
இதன்மூலம் தனது முந்தைய நிலையில் இருந்து மீண்டும் பல்டி அடித்துள்ளான் கதிரவன். மீண்டும் கதிரவன் போலீசாருக்கு ஆதரவாகத்திரும்பியிருக்கிறான்.
இதனால் போலீசார் நிம்மதி அடைந்திருந்தாலும், இப்படி நாளொரு பல்டி அடிக்கும் கதிரவனின் சாட்சியத்தை வைத்துசங்கராச்சாரியாருக்கு எதிராக நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது என சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
அடித்து, உதைத்து வாக்குமூலம் வாங்கினர்: கதிரவன்
பணத் தகராறால் சிக்கிய கொலையாளிகள்
-
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications