மனித உரிமை மீறல்: பெர்னாண்டஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayendrar ஜெயேந்திரர் கைதில் மனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஒரு மடாதிபதியை நடத்தும் விதம் கவலையளிக்கிறதுஎன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.

சென்னை வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக நடந்துள்ளது. இப்போதும் அவர் நடத்தப்படும் விதமும் மனிதஉரிமை மீறல்தான். அவர் ஒரு புகழ்பெற்ற மடாதிபதி. அவரை இவ்வாறு நடத்துவது சரியல்ல.

பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி போன்றவர்கள் ஜெயேந்திரர் கைது விவகாரத்தில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பங்கிருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்கள் அல்லது தகவல்கள் ஏதாவதுஅவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் உறுதியாக அவர்களால் கூற முடியாது. ஆதாரங்களைத் தேவைப்படும்போது வெளியிட நினைத்திருக்கலாம்.

ஜம்மு - காஷ்மீர் எல்லைப்புறங்களில் இருந்து படைகள் குறைக்கப்பட்டதை பொது இடத்தில் வைத்து பேசுவது சரியல்ல. ஒரு வரியில்இதற்கு பதில் கூற முடியாது என்று கூறினார்.

ஜெயேந்திரரை கைது செய்தது தமிழக அரசு. ஆனால், மத்திய அரசையும், சோனியாவையும் சிலர் கடுமையாக விமர்சிப்பது ஏன் என்றகேள்விக்கு, நான் அவ்வாறு யாரையும் விமர்சிக்கவில்லை என்று மட்டும் பதில் தந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+