மனித உரிமை மீறல்: பெர்னாண்டஸ்
சென்னை:
ஜெயேந்திரர் கைதில் மனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஒரு மடாதிபதியை நடத்தும் விதம் கவலையளிக்கிறதுஎன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
சென்னை வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக நடந்துள்ளது. இப்போதும் அவர் நடத்தப்படும் விதமும் மனிதஉரிமை மீறல்தான். அவர் ஒரு புகழ்பெற்ற மடாதிபதி. அவரை இவ்வாறு நடத்துவது சரியல்ல.
பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி போன்றவர்கள் ஜெயேந்திரர் கைது விவகாரத்தில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பங்கிருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்கள் அல்லது தகவல்கள் ஏதாவதுஅவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.
அவ்வாறு இல்லாமல் உறுதியாக அவர்களால் கூற முடியாது. ஆதாரங்களைத் தேவைப்படும்போது வெளியிட நினைத்திருக்கலாம்.
ஜம்மு - காஷ்மீர் எல்லைப்புறங்களில் இருந்து படைகள் குறைக்கப்பட்டதை பொது இடத்தில் வைத்து பேசுவது சரியல்ல. ஒரு வரியில்இதற்கு பதில் கூற முடியாது என்று கூறினார்.
ஜெயேந்திரரை கைது செய்தது தமிழக அரசு. ஆனால், மத்திய அரசையும், சோனியாவையும் சிலர் கடுமையாக விமர்சிப்பது ஏன் என்றகேள்விக்கு, நான் அவ்வாறு யாரையும் விமர்சிக்கவில்லை என்று மட்டும் பதில் தந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications