சென்னையில் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம்
சென்னை:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 4.76 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் கோரி பல லட்சம் பேர் விண்ணப்பம் கொடுத்தனர். இவர்களில் தகுதி உடைய 38 லட்சம் பேருக்குகுடும்ப அட்டைகள் வழங்க அரசு முடிவு செய்தது.
முதல் கட்டமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று முதல் வருகிற 22ம் தேதி வரை 4.76 லட்சம பேருக்கு புதிய குடும்பஅட்டைகள் வழங்கும் பணி தொடங்கியது.
கொருக்குப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும்பணியைத் தொடங்கி வைத்தார். கோட்டூர்புரத்தில் எம்.எல்.ஏ. நடிகர் ராதாரவி தொடங்கி வைத்தார்.
இன்று முதல் 22ம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை புதிய குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் நாளை முதல் ரேஷன் கார்டு விநியோகம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications