புத்தாண்டு: திருப்பதியில் நள்ளிரவு தரிசனம் ரத்து?
Subscribe to Oneindia Tamil
திருப்பதி :
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்வதை இந்த ஆண்டுரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி திருமலையில் சுவாமி தரிசனத்துக்கு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வந்தது. ஆனால் கடந்தஆண்டு இதற்கு பல்வேறு மடாதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகம சாஸ்திர விதிமுறைப்படி எந்த கோயிலிலும் நள்ளிரவு 12மணிக்கு மூலஸ்தான சன்னதிகள் திறக்கக் கூடாது என அவர்கள் கூறினார்கள்.
இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு புது வருடம் பிறக்கும்போது திருமலையில் சுவாமி தரிசன ஏற்பாட்டை ரத்து செய்ய தேவஸ்தானம்முடிவு செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications