அத்வானி கோவை வருகை: மிக பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

பாலக்காட்டில் நடக்கும் பா.ஜ.க. பொதுக் குழு, செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அக் கட்சியின் தலைவர் அத்வானி இன்று கோவைவந்துள்ளார்.

இதனால் கோவை நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து சென்னை வழியாக விமானத்தில் கோவை வந்த அத்வானிக்கு பா.ஜ.கவினர் மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர்.கட்சியின் தமிழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் இல.கணேசன், எம்எல்ஏ ராஜா ஆகியோர் அவரை வரவேற்றனர்.

பின்னர் கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்ற அத்வானி அங்கு கட்சியினரை சந்தித்துவிட்டு ஓய்வெடுக்கிறார்.பிற்பகலில் அவர் பாலக்காடு செல்கிறார். பாலக்காட்டில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் இரவு கோவை வந்து தங்குகிறார் அத்வானி.

நாளை அவர் பெங்களூர் செல்கிறார். அத்வானி ஒரு நாள் கோவையில் தங்க இருப்பதால் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

செல்போன்கள், தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதோடு உளவு போலீசாரும் பெருமளவில் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

விமான நிலையம், விருந்தினர் இல்லம், பாலக்காடு செல்லும் பாதை ஆகியவற்றில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத கார்களும் கோவைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் தான் அத்வானி பயணிக்க இருக்கிறார்.

மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு மண்டல ஐஜி சுப்பிரமணியத்தின் நேரடிக் கண்காணிப்பில் கோவை சரக டிஐஜியான அசுதேஷ் சுக்லா தலைமையில், துணைகமிஷ்னர் நடராஜ், எஸ்பி தினகரனின் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+