கைதிகள் மோதல்: ஜெயிலர் சஸ்பெண்ட்!
கோவை:
கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த மோதலைத் தடுக்கத் தவறியஉதவி ஜெயிலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை சிறை கண்காணிப்பாளராக இருந்த ராஜ்குமார் சமீபத்தில்தான் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கைதிகளிடம் பாரபட்சம்காட்டுவதாக அவர் மீது சரமாரியான புகார்கள் எழுந்ததாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதாலும் அவர் அதிரடியாக சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
இந் நிலையில் கோவை சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த பயங்கர மோதல் தொடர்பாக உதவி ஜெயிலர் கந்தசாமி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், பெருமாள் ஆகிய இருவரும் கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். ராமலிங்கம் கொலை வழக்கில் கைதானவர். இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கைதிகள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ராமலிங்கம், பெருமாளை சில கைதிகள் கிண்டல்செய்துள்ளனர். இதனால் இருவரும் ஆத்திரமடைந்தனர். இதைத் தொடர்ந்து வாக்குவாதம் எழுந்து அது கைகலப்பாக மாறியது.
மற்ற கைதிகள் ஒன்றாய் சேர்ந்து கொண்டு ராமலிங்கத்தையும், பெருமாளையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
இச் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த உதவி ஜெயிலர் கந்தசாமி, மோதலைத் தடுக்க முயற்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜார்ஜ் தியோடர் செல்வின், கந்தசாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications