20 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Shankararamanசங்கரராமன் கொலை வழக்கில் 20 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.இதைத் தயாரிக்கும் பணியில் சட்ட நிபுணத்துவம் பெற்ற 20 மூத்த காவல்துறை அதிகாரிகள், 100 போலீசார்ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பான சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை போலீசார் அசுர வேகத்தில் நடத்தி வருகின்றனர்.விசாரணை கிட்டத்தட்ட இறுதி வடிவத்தை எட்டிவிட்டது.

இந்த வழக்கில் சங்கராச்சாரியார், அப்புவைச் சேர்த்து 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் மட்டும் இன்னும் சிக்காமல் உள்ளார்.

இந் நிலையில், கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றமே அவர்களை ஜாமீனில் விடுவித்து விடும்.

எனவே சங்கரராமன் கொலை வழக்கில் இன்னும் 20 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யகாவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. குற்றப் பத்திரிக்கையை தயாரிக்கும் பணியில் 20 காவல்துறை அதிகாரிகள்,100க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிரமாக உள்ளனர்.

(இன்றுடன் சங்கராச்சாரியார் கைதாகி 42 நாட்கள் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது)

குற்றப் பத்திரிக்கையை எந்தவித குழப்பம், தவறும் இல்லாமல் தயாரிப்பதற்காக சட்ட வல்லுநர்களின்ஆலோசனையும் பெறப்பட்டு வருகிறது.

மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் மேற்பார்வையில் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கும் பணிநடந்து வருகிறது.

தனது இத்தனை ஆண்டு வழக்கறிஞர் சர்வீசிலேயே இவ்வளவு வேகமான விசாரணையை பார்த்ததில்லை என உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராபவருமான கே.டி.எஸ்.துல்சிநீதிமன்றத்திலேயே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+