ராகிங் தற்கொலை: தலைமறைவான மாணவர் சரண்
சென்னை:
சென்னை அருகே பூந்தமல்லியில் ராகிங் கொடுமை காரணமாக பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொள்ள காரணமாகஇருந்த மாணவன் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோகன் கார்த்திக் என்ற மாணவர் பூந்தமல்லி எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூயில் முதலாமாண்டு படித்துவந்தார். அவரை 3வது ஆண்டு படிக்கும் வேணுமாதவ ரெட்டி, பார்கவ் குமார் ஆகிய மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
மோகன் கார்த்திக்கை சிறுநீர் கழிக்கச் செய்து அதை அவரது தலையில் ஊற்றிக் குளிக்க வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளன இந்த இரண்டுஎருமை மாடுகளும். இந்த அவமானத்தை தாங்க முடியாத கார்த்திக் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ராகிங் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கார்த்திக்கின் தந்தை புகார் கொடுத்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந் நிலையில் கார்த்திக் தற்கொலை வழக்கில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ராமதாஸ், மாணவர் பார்கவ் குமார் ஆகியோரைபோலீஸார் கைது செய்தனர். கல்லூரி முதல்வரும், வேணு மாதவ ரெட்டியும் தலைமறைவாக இருந்தனர்.
இவர்களில் வேணு மாதவ ரெட்டி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். முதல்வர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.












Click it and Unblock the Notifications