நாகை முகாமில் பட்டினியால் குழந்தை சாவு?
நாகப்பட்டணம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 வயது சிறுமி, உணவு கிடைக்காமல் இறந்ததாககூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வானவன்மாதேவி என்ற கிராமத்தில் இப்படி ஒரு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு சரியானமுறையில் உணவு வழங்கப்படவில்லை.
இந் நிலையில், இம் முகாமில் தங்கியிருந்த 2 வயது சிறுமி உணவு கிடைக்காமல் பட்டினியால் மயங்கி விழுந்து பரிதாபமாகஇறந்திருக்கிறாள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இச் சம்பவத்தையடுத்து முகாமில் தங்கியிருப்பவர்களும், மற்ற பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்துதேவையான பால் பொருட்கள், பிற உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு ஊழியர்கள் சரியான முறையில் பணியாற்றவில்லை என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம். சிறுமி பலியான முகாமிற்கும் உணவு வினியோகத்தை அரசு ஊழியர்கள் சரிவர மேற்கொள்ளவில்லை.
உணவும், நிவாரணப் பொருட்களும் ஒரு பக்கம் குவிந்தாலும் அதை முறையாக வினியோகிக்க வேண்டிய ஊழியர்கள் அதைச் செய்யத்தவறி வருகின்றனர்.
இதே போலவே போலீஸ்காரர்களும் ஏதோ டூர் வந்தது மாதிரி தான் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றி வருகின்றனரே தவிர, மீட்புப்பணியிலும் நிவாரணப் பணியிலும் இவர்களது பங்களிப்பு மிகக் குறைவே.
ஆங்காங்கே மரத்தடியில் சேர் வாங்கிப் போட்டுக் கொண்டு கையில் குச்சியை வைத்தவாறு கதை பேசி பொழுதைக் கழித்து வருகின்றனர்காக்கிகள்.