ஜெயலலிதாவிடம் இன்று ரூ. 15 கோடி உதவி நிதியளிப்பு!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவிடம் சுனாமி நிவாரண நிதியாக இன்று ரூ. 14.55 கோடி குவிந்தது.
சபாநாயகர் காளிமுத்து, சட்டப் பேரவை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியமான ரூ. 2.15 லட்சத்தை ஜெயலலிதாவிடம் வழங்கினார்.
போக்குவரத்து மற்றும் மின்துறை ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான ரூ. 8.93 கோடிக்கான காசோலையை போக்குவரத்து மற்றும்மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் வழங்கினார்.
ஸ்டெர்லிங் நிறுவன அதிபர் சிவசங்கரன் பிள்ளை ரூ. 1 கோடியும், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வேங்கடரங்கன் ரூ. 36லட்சம், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தலைவர் வெங்கடாச்சலம் ரூ. 25 லட்சம் வழங்கினர்.
விக்ரம் ரூ. 15 லட்சம்:
அதே போல நடிகர் விக்ரம் ரூ. 15 லட்சம், பிரபு ரூ. 2 லட்சம், சத்யராஜ் ரூ. 1 லட்சம், நடிகை சரோஜா தேவி, இயக்குனர் ஷங்கர் ஆகியோர்தலா ரூ. 5 லட்சம், தயாரிப்பாளர் ஏவி.எம். குமரன் ரூ. 10 லட்சம், இயக்குனர் கஸ்தூரி ராஜா,செல்வராகன், தனுஷ் ஆகியோர் சார்பில் ரூ. 5லட்சம்,
இயக்குனர் பி.வாசு ரூ. 1லட்சம், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ரூ. 2.75 லட்சம் என மொத்தம் ரூ. 14.55 கோடி அளவுக்குஇன்று நிதி சேர்ந்தது.
கலாமிடம் உலகத் தலைவர்கள் இரங்கல்:
இதற்கிடையே சுனாமியால் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்தியர்களுக்கு ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியாமகபாகல் அரோயோ, பனாமா அதிபர் மேட்ரில் எஸ்பினோ, சிங்கப்பூர் அதிபர் நாதன், வியட்நாம் அதிபர் டிரான் லுவான், கல்போர்னியாகவர்னர் அர்னால்ட் ஸ்வார்சனேகர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.