ஆர்.விக்கும் சம்மன்?

Subscribe to Oneindia Tamil

காஞ்சி:

R.Venkatraman சங்கரராமன் கொலை வழக்கில் மாஜி தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்கும்போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை 24 பேர் கைதாகியுள்ள இந்த வழக்கில் விஜயேந்திரரை இன்று விசாரிப்பதாக இருந்த போலீசார், இன்று முழுவதும் மேலும்பலரை விசாரிக்க வேண்டியுள்ளது, இதனால் உங்களை பின்னர் விசாரிப்போம் என்று கூறி அவருக்கு அனுப்பிய சம்மனை ரத்துசெய்துவிட்டனர்.

இந் நிலையில் காஞ்சி மடத்துக்கு மிக நெருக்கமான டி.என். சேஷன் உள்ளிட்ட பலருக்கும் சில தினங்களுக்கு முன் போலீசார் சம்மன்அனுப்பியிருந்தனர். அந்தப் பட்டியலில் ஆர்.வெங்கட்ராமனின் பெயரும் இருப்பதாக இப்போது தெரிய வருகிறது. ஆனால், இதைபோலீசார் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.

ஆர்.விக்கு சம்மன் அனுப்பப்பட்டது உறுதியானால், முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரை, கொலை வழக்கில் போலீசார்விசாரணைக்கு அழைப்பது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும்.

உஷாவுக்கு ஜாமீன்:

இந் நிலையில் காஞ்சி போலீசாரால் விசாரிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் உஷாவுக்கு வங்கி மோசடி வழக்கில் காளஹஸ்திநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ. 30 லட்சம் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த வழக்கில் இவருக்கு எதிராககைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரான உஷாவை 12ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதிபிறகு, அவகுக்கு ஜாமீன் வழங்கித் தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+