இன்று 8ம் நாள் காரியம்: நாகை, கடலூரில் கடைகள் மூடல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

The Scene in Nagai Coaltal area

சுனாமி தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்து இன்றுடன் 8ம் நாள் என்பதால் இறந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் நாகப்பட்டிணம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று பெரும்பாலான கடைகள்அடைக்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தை தாக்கிய சுனாமி அலைகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். சுனாமிதாக்கி இன்றுடன் 8 நாட்கள் ஆகிறது.

சுமார் 1,000 பேரைக் காவு கொண்ட கடலூர் மாவட்டத்தில் இன்று இறந்தவர்களின் குடும்பங்களில் 8ம் நாள்காரியம் செய்யப்படுகிறது. இதையொட்டி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மாவட்டம்முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதேபோல, 6,000 பேரை பலி கொடுத்த நாகை மாவட்டத்திலும் இன்று பல இடங்களில் கடைகள்மூடப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் சுனாமியால் இறந்தவர்களின் புகைப்படங்களை சாலையில் வைத்து மாலை அணிவித்துபொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நெருங்கிய உறவுகளைப் பலி கொடுத்த மக்கள் பல இடங்களில் நடுரோட்டில் அஞ்சலி செலுத்தியவாரே உடைந்துபோய் கதறுவதைப் பார்க்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+