அனாதையான குழந்தைகள் பெயரில் ரூ. 5 லட்சம் டெபாசிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

children lost parents to tsunami in TN

சுனாமியால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகள், இளம் பெண்களின் பெயரில் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுஅவர்கள் 18 வயதை எட்டியவுடன் அந்தப் பணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சுனாமி தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கும், மகன்களை இழந்த வயதான பெற்றோர்களுக்கும் மாதந்தோறும் ரூ. 200உதவித் தொகை, மாதம் 2 கிலோ இலவச அரிசி, தினமும் இலவச சத்துணவு, வருடம் 2 முறை ஆண்களுக்கு வேட்டியும்,பெண்களுக்கு சேலையும் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் சத்துணவை ஏற்க மறுப்பவர்களுக்கு மாதம் 4 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந் நிலையில் அடுத்தகட்டமாக மறு வாழ்வுக்காக புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

இதன்படி பெற்றோரை இழந்து ஆதரவற்றுப் போய்விட்ட குழந்தைகள் பெயரில் தலா ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அதேபோல பெற்றோரை இழந்த 14 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்யப்படும்.

குழந்தைகள், பெண்கள் 18 வயதை அடைந்தவுடன் அந்தப் பணம் அவர்களுக்கு வழங்கப்படும். 14 முதல் 18 வயதுக்குட்பட்டபெண் குழந்தைகள் உடனே அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்காக புதியமுகாம்களும் உடனே உருவாக்கப்படும்.

அந்த முகாம்களில் இந்தப் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் அளிக்கப்படும் என ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+