நீதிபதி மு.மு. இஸ்மாயில் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கம்பராமாயண ஆய்வாளரும், தமிழறிஞரும், முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான மு.மு. இஸ்மாயில்உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணமடைந்தார்.

டெல்லி, சென்னை உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவர் இஸ்மாயில். 1979-ம் ஆண்டு முதல் 1981ம்ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பையும் வகித்துள்ளார்.

இந்தக் கால கட்டத்தில் தமிழக ஆளுநர் பொறுப்பையும் சில காலம் வகித்த பெருமைக்குரியவர்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இஸ்மாயில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை இறந்தார்.

84 வயதான இஸ்மாயில் 1921ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி பிறந்தவர். தமிழ் ஆர்வலரான நீதிபதிஇஸ்மாயில் கம்ப ராமாயாணம் மீது அதிக பற்றுக் கொண்டவர்.

கம்பன் மீது கொண்ட காதலால், சென்னையில் 1974ம் ஆண்டு இவரது முயற்சியால் கம்பன் கழகம் நிறுவப்பட்டது.அதன் தலைவராக இஸ்மாயில் நியமிக்கப்பட்டார்.

மயிலாப்பூரில் உள்ள இஸ்மாயில் வீட்டுக்கு இன்று காலை சென்ற திமுக தலைவர் கருணாநிதி அவரது உடலுக்குமலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக ஆளுநர் பர்னாலாவும் இஸ்மாயில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+