நதிகள் இணைப்பு: வைகோவுக்கு பிரதமர் கடிதம்
சென்னை:
நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிடவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ எழுதிய கடிதத்துக்கு சிங் அனுப்பிய பதில் கடிதத்தில்,
தென்னக நதிகளை இணைப்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், சுற்றுச்சூழலியளார்கள் ஆகியோருடன்ஆலோசனை நடத்தி விரைந்து முடிவெடுக்கப்படும்.
இத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் கூட்டணி அரசின் குறைந்தபட்சசெயல் திட்டத்தில் சொல்லியிருப்பதைப் போல இத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் பிரதமர்.
இலங்கை ஒப்பந்தத்தை தடுக்க வைகோ:
இதே போல இந்தியா-இலங்கைக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுவதையும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து தடுத்துள்ளார் வைகோ.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை தரப்பில் இருந்து தரப்பட்ட நெருக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை, ரா அமைப்புஆகியவை ஆதரவு தந்தாலும் அதை சோனியாவிடமும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் பேசி வைகோ தடுத்துள்ளார்.