பழனி தைப்பூசம்: இன்று தொடக்கம்
பழனி:
தமிழகத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றா தைப்பூசம் பழனியில் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன்தொடங்குகிறது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். 10நாட்கள் நடக்கும் இந்த விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அடுத்த 10 நாட்களுக்கு தினமும் பல்வேறுவாகனங்களில் சுவாமி உலா நடைபெறும். 24ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சிநடைபெறுகிறது.
அன்று இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும்.
25ம் தேதி தைப்பூச விழா நடக்கிறது. காலை 5 மணியளவில் சண்முகா நதியில் பக்தர்களுக்கு சுவாமி தீர்த்தம்வழங்கும் நிகழ்ச்சி நிடைபெறும். காலை 10.40 மணிக்கு மேல் தைப்பூசத் தேரேற்றம் நடக்கும்.
மாலை 4.35 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். தைப்பூசத்தையொட்டி கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறைசார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.