கொலை வழக்கு: 4 இந்து முன்னணியினர் விடுதலை
சென்னை:
கோவை பேக்கரி கடை அதிபர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இந்து முன்னணியினரை விடுதலை செய்துசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் நிஷா பேக்கரி என்ற கடையை நடத்தி பாபு என்பவர் கடந்த 1995ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.இந்தக் கொலை தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த நாகப்பன், மருதாச்சலம், குணசீலன், பழனிச்சாமி, பாலன் என்ற பாலகிருஷ்ணன்ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் நாகப்பனை மட்டும் விடுவித்த கோவை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மற்ற நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.தினகர், நீதிபதி குலசேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்கள்சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
நான்கு பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications