ஜெயகாந்தனுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஞானபீட விருது பெற்றதற்காக ஜெயகாந்தனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய இலக்கியத் துறையில் மிகப் பெரிய பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படும் ஞானபீட விருதுஜெயகாந்தனுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.
இளமையில் பள்ளிக்குச் செல்லாமல் தானே படித்து சுயமாகவே தமிழகத்தின் சிறந்த இலக்கியவாதியாக உருவானவர் ஜெயகாந்தன்.
தனது எழுத்தாற்றலால், தமிழ் இலக்கியத்தில் புரட்சி செய்தவர் அவர். அகிலனுக்குப் பிறகு ஞானபீட விருது பெற்ற இரண்டாவது தமிழர் என்ற பெருமைஜெயகாந்தனுக்குக் கிடைத்துள்ளது. இச் செய்தி உலகில் உள்ள தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது என்று கூறியுள்ளார் வாசன்.












Click it and Unblock the Notifications