ராதாகிருஷ்ணன் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
வாணியம்பாடி:
காம வெறியன் ராதாகிருஷ்ணனின் வாணியம்பாடி பண்ணை வீட்டை முற்றுகையிட்டு, அதில் குடியிருக்கும் காவலாளி ரங்கசாமி,அவரது மருமகனும், அரசு போக்குவரத்துக் கழக டிரைவருமான ஜெயராமன் ஆகியோரை வீட்டைக் காலி செய்யுமாறு கூறிபொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த வீடு இப்போது தினசரி செய்திகளில் அடிபடும் இடமாகி விட்டதால் சங்கிலிக்குப்பம் கிராம பொதுமக்கள்அவமானமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊர் நாட்டாமை உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று இந்த வீட்டுக்கு வந்தனர்.
ரங்கசாமியையும், ஜெயராமனையும் கூப்பிட்டு உடனடியாக இந்த வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விடுங்கள். உங்களால்எங்களுக்கு அவமானமாக உள்ளது. ஊரில் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கிறது என்று கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பயந்து போன ஜெயராமன், ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரையடுத்து போலீஸார்விரைந்து வந்தனர். ஊர் மக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் இப்பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக இரு தரப்பினரையும்காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
காமக் கொடூரன் ராதாகிருஷ்ணன் செய்த அனைத்து இழி செயல்களும் காவலாளி ரங்கசாமிக்குத் தெரியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.