குழந்தைகள் கடத்தல்: மலேசிய சமூக சேவை நிறுவனத்துக்கு சீல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடைபாதை வாசிகளின் குழந்தைகளைக் கடத்தி விற்றது தொடர்பான வழக்கில், அக் குழந்தைகளை தத்து எடுத்து, வெளிநாடுகளில் விற்றசமூக சேவை நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதன் நிறுவனர் மற்றும் தலைவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஓட்டேரி, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வசிப்போர், குடிசைவாசிகள் ஆகியோரின்குழந்தைகளை பிச்சைக்காரிகள் உதவியோடு கடத்தி, விற்ற கும்பல் பிடிபட்டுள்ளது.

இவர்கள் கடத்திய 7 குழந்தைகளும், சென்னை திருவேற்காடு அருகே உள்ள மலேசியன் சோசியல் சர்வீஸஸ் என்ற சமூக சேவைநிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளிலும், தமிழகத்திலும் தத்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த பரபரப்பான கடத்தல் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

குழந்தைகள் விற்கப்பட்ட மலேசியன் சோசியல் சர்வீஸஸ் நிறுவன அலுவலகத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். குழந்தைகள்தத்து எடுக்கப்பட்ட, கொடுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

இந் நிறுவனம் இதுவரை 325 குழந்தைளை தத்து கொடுத்துள்ளது. இவற்றில் 125 குழந்தைகள் வெளிநாடுகளுக்கு தத்துகொடுக்கப்பட்டுள்ளன.

கடத்தப்பட்ட 7 குழந்தைகளும் இந்த நிறுவனத்தின் மூலம் தத்து கொடுக்கப்பட்டுள்ளதால், தெயவந்துள்ளதால், மற்ற குழந்தைகளும்இவர்களுக்கு எப்படிக் கிடைத்தார்கள் என்பதையும் விசாரிக்க வேண்டியுள்ளது.

எனவே விசாரணைக்கு வசதியாக மலேசியன் சோசியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் அலுவலகத்தை போலீஸார் சீல் வைத்துள்ளனர். அதன்நிறுவனர் ரவீந்திரநாத், அவரது மனைவியும் நிறுவனத் தலைவருமான வத்சலா ஆகிய இருவரையும் விசாரணைக்கு வருமாறு சம்மன்அனுப்பியுள்ளனர்.

குழந்தைகளை கடத்தி வெளிநாட்டில் விற்பனை: பிச்சைக்காரி உள்பட 5 பேர் கைது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+