For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற ஆதி மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கைது செய்யச் சென்ற போது இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக கூறி ஆதிகேசவன் மீது புதியவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோசடி மன்னன் ஆதிகேசவன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந் நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்ய முயன்றதாக புதிதாக ஒரு வழக்கைப்போலீஸார் போட்டுள்ளனர்.

ஆதிகேசவனை எழும்பூரில் உள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகம் அருகே கைது செய்யச் சென்ற போதுஇன்ஸ்பெக்டர் ஜவஹரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய ஆதிகேசவன் முயன்றதாக புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் எழும்பூர் கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆதிகேசவனைபோலீஸார் ஆஜர்படுத்துகிறார்கள்.

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ஆதி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X