கராத்தேவை எண்கெளன்டரில் கொல்ல வாய்ப்பு: மனைவி அச்சம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
கராத்தே தியாகராஜனை போலீசார் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்ல வாய்ப்பு இருப்பதாக அவரது மனைவி ஜோதி அச்சம்தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் வந்துள்ளனர்.ஆனால், என் கணவர் உயிருக்கு தொடர்ந்து ஆபத்து இருப்பதாகவே கருதுகிறேன். யாரால் ஆபத்து என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.
ஆனால், எங்களைச் சுற்றி ஏதோ சதி நடந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். என் கணவரின் வளர்ச்சி பிடிக்காத அதிமுகவினர்கூட இந்த சதி வலையை பின்னி இருக்கலாம். அவரை போலீசார் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லலாம் என்ற அச்சமும்இருக்கிறது.
அவரது உதவியாளர்களின் வீடுகளில் போலீசார் சோதனை போட்டுள்ளனர். அவர்கள் வீட்டுப் பெண்களை காவல் நிலையத்துக்குகொண்டு சென்று விசாரித்துள்ளனர். இதே நிலை எனக்கும் என் குடும்பத்துக்கும் வரலாம்.
என் கணவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சி நடக்கிறது என்றார் ஜோதி.













Click it and Unblock the Notifications