கருணாநிதியுடன் உலக வங்கி இயக்குனர் சந்திப்பு
சென்னை:
உலக வங்கியின் இந்திய இயக்குனர் மைக்கேல் கார்ட்டர் இன்று முதல்வர்கருணாநிதியை சந்தித்து பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
உலக வங்கியின் இந்திய இயக்குனர் மைக்கேர் கார்ட்டர் இன்று சென்னை வந்தார்.தலைமைச் செயலகத்தில் கருணாநிதியை சந்தித்து உலக வங்கி திட்டங்கள் தொடர்பாகவிவாதித்தார்.இச் சந்திப்பின்போது தமிழக அமைச்சர்கள் அன்பழகன், ஸ்டாலின், துரைமுருகன்,தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் ரூ. 3,900 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறுநீர்ப்பாசனத் திட்டங்களுக்கு உலக வங்கியின் அனுமதி மற்றும் நிதியுதவியைகருணாநிதி கோரினார்.
அதுகுறித்து உரிய முறையில் பரிசீலித்து ஒப்புதல் தரப்படும் என கார்ட்டர்உறுதியளித்தார்.
மேலும், சுகாதாரம், உள்ளாட்சி, வறுமை ஒழிப்பு, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்டபல்வேறு திட்டங்கள் குறித்தும் கார்ட்டர் விவாதித்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலோரப் பகுதிகளில் 20,000 வீடுகள் கட்டித்தரும் தமிழக அரசின் திட்டத்திற்கு உலக வங்கி உதவ வேண்டும் என்றும் கருணாநிதிகோரிக்கை வைத்தார்.












Click it and Unblock the Notifications