For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை வருகிறார் ரணில் விக்கிரமசிங்கே!
சென்னை:
இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று சென்னை வருகிறார்.முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.விக்கிரமசிங்கே இன்று மாலை சென்னை வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோர மண்டல் ஹோட்டலில் அவர் தங்குகிறார். செனனையில்முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர் சந்திக்கத்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டைஅவர்களிடம் விக்கிரமசிங்கே வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
நாளை இரவு மீண்டும் இலங்கை திரும்புகிறார். விக்கிரமசிங்கேவின் சென்னை பயணநிகழ்ச்சி நிரல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் யாரை சந்திக்கத்திட்டமிட்டுள்ளார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
Comments
Story first published: Saturday, September 2, 2006, 5:30 [IST]