ஆளுனர் பர்னாலா கண் தானம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுனர் பர்னாலா தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் சென்னை பிரிவு கண் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளது.இந்த கண் வங்கியை பர்னாலா தொடங்கி வைத்து அவர் பேசுகையில்,எனது கண்கள் இளைஞர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என விரும்புகிறேன். இதன்மூலம் அந்த இளைஞர்களுக்கு நான் பல ஆண்டுகள் ஆக்கப்பூர்வமாக உதவ முடியும்என நினைக்கிறேன்.
எனக்கு 80வயது ஆன போதிலும் கூட எனது கண்களைத் தானமாக தரமுடியும் எனஇங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால்தான் கண்களைத் தானம்செய்யும்முடிவுக்கு வந்தேன்.
இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில்தான் நான் இருக்கப் பாகிறேன். இந்த காலகட்டத்திற்குள் எனது கண்கள் யாருக்கேனும் பயன்படக்கூடிய வாய்ப்பு உருவாகும்என நினைக்கிறேன் என்று உருக்கமாகப் பேசினார் பர்னாலா.
பின்னர் இதுதொடர்பாக விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து சென்னை கண் வங்கியின்இயக்குனர் பிரேமாவிடம் வழங்கினார் ஆளுனர்.












Click it and Unblock the Notifications