விருதுநகர்-பஸ் மோதி 4 பயணிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
அருப்புக்கோட்டை அருகே பேருந்துக்காக காத்திருந்த கூட்டத்தில் பஸ் புகுந்ததில் 4பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 5 பேர் காயமடைந்தனர்.
அத்திப்பட்டி என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. இங்குள்ள பேருந்து நிறுத்ததைநோக்கி அருப்புக்கோட்டையிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் அரசுப் பேருந்துவந்தது.அந்தப் பேருந்து, நிறுத்தத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது, எதிரே திடீரென ஒருஆட்டோ வந்தது. ஆட்டோ மீது மோதாமல் தவிர்க்க ஓட்டுனர் பேருந்தைதிருப்பினார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில்நின்றிருந்தவர்கள் மீது பாய்ந்தது.
இதில் நல்லையன், ஆதம்மாள், சாந்தி, பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயேபலியாயினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் வேகத்தடை இல்லாததால்தான் அடிக்கடி விபத்துக்கள்நடப்பதாக கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். அரசுப்பேருந்தின் ஓட்டுனர் அய்யம்பெருமாளை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications