சென்னை: வன்முறையில் ஈடுபட்ட 311 பேர் கைது
சென்னை:
சென்னை நகரில் வாக்குச் சாவடிகளில் வன்முறை மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாக அதிமுக எம்.எல்.ஏக்கள்கலைராஜன், சேகர்பாபு உள்ளிட்ட 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளாதாக மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெருமளவில் வன்முறை மூண்டது. இதைத் தொடர்ந்து டிஜிபி முகர்ஜி, மாநகரகாவல்துறை ஆணையர் லத்திகா சரண் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.டிஜிபி முகர்ஜி பேசுகையில், சென்னை நகரில் வன்முறையில் ஈடுபட்டதாக 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
லத்திகா சரண் பேசுகையில், சென்னை நகரில் 12 இடங்களில் மறியல் நடந்தது. அதில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சில இடங்களில் வாக்குப் பெட்டிகள் சூறையாடப்பட்டன.
மோதலில் 3 போலீஸார் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாக்குப்பதிவின்போது உடலில் ரத்த சாயத்தை பூசிக் கொண்டு நாடகமாடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்முறையில் ஈடுபட்டதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபு, கலைராஜன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications