கிணற்றில் வீசி 3 குழந்தைகளைக் கொன்ற தாய்!
சேலம்:3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற தாய் தானும் தற்கொலைக்கு முயன்றார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி என்ற இடத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக் கடையில் வேலைபார்த்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு கீர்த்திகா (வயது 6), பிரியதர்ஷினி(3), பூபதி ராகவன் (8 மாதம்) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளன.
பழனிச்சாமிக்கும், மாதம்மாளுக்கும் இடையே பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் வெறுப்படைந்தமாதம்மாள் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து மூன்று குழந்தைகளுடன் அருகில் இருந்த கிணற்றுக்குச் சென்ற மாதம்மாள், தனது குழந்தைகளைஅடுத்தடுத்து கிணற்றுக்குள் வீசினார். இதில மூன்று பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தனர். அதையடுத்துமாதம்மாளும் கிணற்றில் குதித்தார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மாதம்மாளையும், குழந்தைகளையும் மீட்டனர். ஆனால் மாதம்மாளைமட்டுமே காப்பாற்ற முடிந்தது. படுகாயமடைந்த நிலையில் மாதம்மாள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications