கேப்டன்-மாலைமுரசு மீது திமுக அவதூறு வழக்கு
சென்னை:தனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி மீது குற்றம் சாட்டிப் பேசிய நடிகர் விஜய்காந்த் மீதும், அவரதுபேட்டியை வெளியிட்ட மாலை முரசு நாளிதழ் மீதும் திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
சமீபத்தில் விஜயகாந்த் உள்ளிட்டோரின் இருப்பிடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. முதல்வர் கருணாநிதி தூண்டுதலின் பேரில்தான் இந்தசோதனை நடத்தப்பட்டதாக விஜயகாந்த் குற்றம் சாட்டி பேட்டி அளித்திருந்தார்.
இந் நிலையில், திமுக சார்பில் அதன் பொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, விஜயகாந்த் மற்றும் அவரது பேட்டியைப்பிரசுரித்த மாலை முரசு நாளிதழின் ஆசி>யர் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் தலைமைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று அவதூறுவழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதிதான் காரணம் எனஅவதூறாக பேட்டி அளித்துள்ளார் விஜயகாந்த்.
இதன் மூலம் திமுக தொண்டர்களும், கருணாநிதி குடும்பத்தினரும், உற்றார், உறவினர்களும், நண்பர்களும் பெரும் மன உளைச்சலுக்குஆளாகியுள்ளனர்.
முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள விஜயகாந்த் மீதும், அவரது பேட்டியை வெளியிட்ட மாலை முரசு நாளிதழ்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
ஏற்கனவே இதே நீதிமன்றத்தில் மதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்பாக கருணாநிதியை விமர்சித்ததற்காக வைகோ மீதும் திமுக சார்பில் அவதூறுவழக்கு தொடரப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். அந்த வழக்கில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் சேர்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications