பிராமணர்களை விமர்சித்த காந்தி பேரன் மீது கேஸ்
உஜ்ஜையினி: மகாத்மா காந்தியின் கொலைக்கு பிராமண சமுதாயம்தான் காரணம் என விமர்சித்ததாக காந்தியின் பேரன் துஷார் காந்தி உள்ளிட்ட 6 பேர் மீதுமத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உஜ்ஜையினியைச் சேர்ந்த பிராமண சங்கத்தைச் சேர்ந்த யோகேஷ் வியாஸ், தேவேந்திர சுக்லா, விஜயேந்திர சாஸ்தி> ஆகியோர் நீதித்துறை நடுவர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், மகாத்மா காந்தி படுகொலைக்கு பிராமண சமுதாயம்தான் காரணம் என துஷார் காந்தி பேசியுள்ளார். இது பிராமண சமுதாயத்தைஅவமதிப்பதாகவும், கலவரத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது.
எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி தன்வீர் அகமது கான், துஷார் காந்தி, மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜே.அக்பர், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செளகான்,மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மண்டோலி, காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெய்தீப் பிரசாத், மனமோகன் குப்த் ஆகியோர் மீதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications