பெங்களூரில் பஸ்கள், கடைகள் மீது கல்வீச்சு:ஐடி நிறுவனங்கள் மூடல்-தமிழ் சேனல்கள் கட்
பெங்களூரூ:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையடுத்து பெங்களூரில் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
ராஜாஜி நகர், மாகடி ரோடு பகுதிகளில் பஸ்கள், கடைகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தன. மேலும் ஜே.சி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள்மூடப்பட்டன. தமிழர்கள் மிக அதிகமாக வசிக்கும் அல்சூர் பகுதியிலும் கடைகள் மீது கல் வீச்சு நடந்தது.
தீர்ப்பு வெளியானவுடன் பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தின. இதையடுத்துபெங்களூரின் பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் பிற்பகலில் வெறிச்சோடின.
ஒசூர் ரோட்டில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டி நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் வீடுகளுக்குக் கிளம்பிவிட்டனர். அதே போலஐடிபிஎல்லிலும் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் வீடு திரும்பிவிட்டனர்.
மேலும் பிற தனியார், அரசு அலுவலங்களைச் சேர்ந்த ஊழியர்களும் வீடு திரும்பிவிட்டனர்.
தமிழ் சேனல்கள் கட்:
இதற்கிடையே பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் தமிழ் டிவி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.
போலீஸ் எஸ்எம்எஸ்:இந் நிலையில் நகரம் அமைதியாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பெங்களூர் போலீசிடம் இருந்து செல்போன்களுக்குஎஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications