சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு-கருணாநிதி உறுதி
சென்னை:தமிழத்தில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று பிற்படுத்ப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்தின்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டுப் பேசுகையில், சிறுபான்மையினருக்கு கல்வி, அரசுப் பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையிலும், பின்னர் அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான ஆணையமும், அம்பாசங்கர் கமிஷன் அளித்த அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
உச்சநீதிமன்றத்தில் தற்போது தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது. அது முடிந்து தீர்ப்பு வெளியான பின்னர், சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications