லிப்ட்டில் சிக்கிய அமைச்சர்கள்-ராணுவம் மீட்டது
டப்ளின்:லிப்ட்டுக்குள் சிக்கி கடும் அவதிப்பட்ட அயர்லாந்து நாட்டின் முக்கிய அமைச்சர்கள் 6 பேரை ராணுவம் போராடி மீட்டு வெளியே கொண்டு வந்த சம்பவம் அயர்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் அமைச்சரைவக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும், வெளியுறவு அமைச்சசர் டெர்மாட் அஹெர்ன், நிதித்துறை அமைச்சர் பிரையன் கோவன் மற்றும் சுகாதாரம், கல்வி, விவசாயம், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள் லிப்ட்டில் சென்றனர்.
ஆனால் லிப்ட் பாதி வழியிலேயே பழுதடைந்து நின்று விட்டது. இதனால் அமைச்சர்கள் பீதியடைந்தனர். பலரையும் உதவிக்குக் கூப்பிட்டுப் பார்த்தும் யாரும் வரவில்லை.
நேரம் போகப் போக பீதி அதிகமாகவே, கடைசியில் ராணுவத்தைத் தொடர்பு கொண்டு தாங்கள் லிப்டுக்குள் சிக்கியிருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து ராணுவம் விரைந்து வந்தது.
கால் மணி நேரம் போராடி 6 அமைச்சர்களையும் ராணுவ வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மொத்தமாக ஆறு அமைச்சர்களும் அரை மணி நேரம் லிப்ட்டுக்குள் அவதிப்பட நேர்ந்தது.
முக்கியத் துறைகளின் அமைச்சர்கள் லிப்ட்டில் சிக்கி அவதிப்பட்ட சம்பவம், அயர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் டெர்மாட் கூறுகையில், முதலில் சாதாரணமாகத்தான் இருந்தோம். ஜோக் சொல்லிக் கொண்டிருந்தோம்.
ஆனால் நேரம் போகப் போக பீதி ஏற்பட ஆரம்பித்தது. எங்களால் நகர முடியவில்லை. வியர்த்துக் கொட்டியது. அந்த இடமே சூடாகி விட்டது.
பலரையும் கூப்பிட்டுப் பார்த்தும் பலன் இல்லை. பாதுகாப்புத் துறை அமைச்சரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியில் ராணுவத்தைத் தொடர்பு கொண்டு மீண்டு வந்தோம்.
இதற்கு முன்பும் இதுபோல எங்களில் சிலர் லிப்ட்டில் சிக்கித் தவித்த அனுபவம் உண்டு. பிரதமருடன் நான் ஒருமுறை லிப்ட்டில் சிக்கியுள்ளேன். அதேபோல, துணைப் பிரதமரும், சுகாதாரத் துறை அமைச்சரும் ஒருமுறை இப்படி மாட்டிக் கொண்டு அவதிப்பட்டனர் என்றார் அவர்.
அயர்லாந்து அரசு அலுவலங்களில் லிப்ட்டுள் அடிக்கடி பழுதாவது சகஜமானதாம். ஆனால் இதுகுறித்து அரசு கவலைப்படாமல் இருப்பது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்த அமைச்சரவையும் லிப்ட்டுக்குள் சிக்கி தவிக்கும் நிலை வருவதற்குள் அரசு சுதாரித்துக் கொள்ள வேண்டும் என அங்குள்ள பத்திரிக்கைகள் அயர்லாந்து அரசை கிழி கிழியென்று கிழித்துள்ளன.
-
சம்பளம் கட், பள்ளிகளுக்கு விடுமுறை, வாகனத்தை இயக்கவே தடை.. ஈரான் போரால் திண்டாடும் பாகிஸ்தான் -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications