வெறிநாய்களிடம் சிக்கி காயமுற்ற மாணவிகள்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஹைதரபாத்தில் உள்ள மகளிர் கல்லூரிக்குள் புகுந்த வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் 7 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள கோட்டி மகளிர் கல்லூரிக்குள் கூட்டமாக சில வெறிநாய்கள் புகுந்தன. அப்போது மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
நாய்கள் கூட்டமாக புகுந்ததால் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவிகள் பயந்து அலறி வெளியே ஓடினர். அவர்களை நாய்கள் துரத்தி சென்று கடித்து குதறின.
இதில் 7 மாணவிகள், சில கல்லூரி ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களை நாராணகூடாவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாநகராட்சி நாய் பிடிக்கும் ஊழியர்கள் விரைந்து வந்து வெறிநாய்களை விரட்டிப் பிடித்தனர். சில நாய்கள் அவர்களிடம் சிக்கின, சில தப்பி விட்டன.












Click it and Unblock the Notifications