வெடி மருந்து கிட்டங்கிகளில் அதிரடி சோதனை
சென்னை: விழுப்புரம் மாவட்டம் செண்டூர் வெடி விபத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வெடிமருந்து கிட்டங்கிகளில் அதிரடி சோதனை நடந்து வருவதாக டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், செண்டூர் விபத்தில் வெடித்த வெடிபொருட்களை விற்ற சேகருக்குச் சொந்தமான வெடி மருந்து கிட்டங்கியில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கால்சியம், அம்மோனியம், நைட்ரேட் கலந்த வெடிமருந்தும், டெட்டனேட்டர்களும் இருந்தன.
செண்டூர் சம்பவம் தொடர்பாக தவறு செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வெடி விபத்து போல் இனி நடக்காமல் இருக்க விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலுள்ள அனைத்து வெடி மருந்து கிடங்குகளும் கண்காணிக்கப்படும். அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், காவல்துறை எஸ்.பி. தலைமையில், சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெடிபொருட்களை விநியோகிக்க உரிமம் வைத்திருப்பவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து வெடிபொருட்களை வாங்கிச் செல்வோர் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications