முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:முன்னாள் தமிழக அமைச்சர் ப.உ. சண்முகம் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
![]() |
திருவண்ணாமலையைச் சேர்ந்த சண்முகம் திமுக, அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர்.
கருணாநிதி மற்றும் எம்ஜிஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர். 83 வயதான அவர் சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு அவர் காலமானார். திருவண்ணாமலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
திமுகவின் முன்னணி தலைவராக இருந்த சண்முகம், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்தார்.
எம்ஜிஆர் கால அதிமுகவில் முக்கிய இடம் வகித்த சண்முகத்துக்கு ஜெயலலிதாவிடம் இருந்து எந்த மரியாதையும் கிடைக்கவில்ைல. பல முக்கிய தலைவர்களுக்கும் ஏற்பட்ட கதி தான் சண்முகத்துக்கும் ஏற்பட்டது.
இதனால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். சமீப காலமாக உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.













Click it and Unblock the Notifications