For Quick Alerts
For Daily Alerts
Just In
உயர்நீதிமன்றம்-13 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 13 பேர் நிரந்தர நீதிபதிகளாக்கப்பட்டுள்ளனர். 13 பேரும் இன்று பதவியேற்கவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவி வரும் நீதிபதிகள் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த சில மாதங்களில் 13 நீதிபதிகள் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
மோகனராம், ஜோதிமணி, சித்ரா வெங்கட்ராமன், ரகுபதி, கே.என்.பாட்ஷா, ஜனார்த்தனராஜா, பால்வசந்தகுமார், சுகுணா, ஜெயச்சந்திரன், ராஜேஸ்வரன், தனபாலன், சுதாகர், சம்பத்குமார் ஆகிய அந்த 13 பேரும் தற்போது நிரந்தர நீதிபதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இன்று 13 பேரும் பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏபி.ஷா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
Comments
chennai tamil nadu உயர்நீதிமன்றம் thatstamil நீதிபதிகள் பதவியேற்பு judge பற்றாக்குறை oath tamilnadu tamil news headlines swear local body election tn political breaking
Story first published: Friday, April 20, 2007, 5:30 [IST]