27%: பிரதமருடன் அர்ஜூன்சிங் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன்சிங் ஆலோசனை நடத்தினர்.
உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் அதை உச்சநீதிதமன்றம் நிராகரித்து விட்டது.
அடுத்தகட்ட விசாரணையை மே 8ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை எப்படி மேற்கொள்வது, இட ஒதுக்கீட்டை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து பிரதமருடன், அர்ஜூன் சிங் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications