Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழர்கள் கொலை-இலங்கை மீது சர்வதேச குழு புகார்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:இலங்கையில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி வருகிறது. 17 சுனாமி நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணையை இலங்கை அரசு அலட்சியப்படுத்தி வருகிறது என்று சர்வதேச வழக்கறிஞர் குழு என்ற மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையின் மட்டூர் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரான்ஸிலிருந்து வந்த நிவாரணப் பணியாளர்கள் 17 பேர் (அனைவரும் தமிழர்கள்) கொல்லப்பட்டனர்.

இவர்களை புலிகள்தான் கொன்றதாக முதலில் இலங்கை அரசு கூறியது. ஆனால் இலங்கை ராணுவம்தான் இவர்களைக் கொடூரமாக கொலை செய்ததாக பின்னர் தெரிய வந்தது.

இதுதொடர்பான விசாரணையை படு மந்தமாக நடத்தி வருகிறது இலங்கை அரசு. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. லண்டனில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, சர்வதேச வழக்கறிஞர்கள் கமிஷன் (சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தது) அமைப்பின் பொதுச் செயலாளர் நிக்கோலஸ் ஹோவன் கூறுகையில், இந்த விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும். வெளிப்படையாக நடக்க வேண்டும்.

ஆனால் இதுவரை சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ராணுவ வீரரைக் கூட இலங்கை போலீஸார் இன்னும் விசாரிக்கவில்லை. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இலங்கையில் நீதிக்கு பெரும் அநீதி நிகழ்த்தப்படுகிறது என்பதற்கு இது சரியான உதாரணமாகும். அங்கு சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி வருவதையே இது உணர்த்துகிறது.

கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தம் கடந்த ஆண்டுடன் முடிந்து ேபாய் விட்டது. அதன் பின்னர் கடத்தல்கள், கொடுமைகள், கொலைகள் அதிகரித்து விட்டன.

எனவே இந்த விசாரணை குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. மனித உரிமை பார்வையாளர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+