பாலாறு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வழக்குரெட்டி டபுள் ஆக்ட்
டெல்லி:பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 1892ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறும் வகையில், ஆந்திர அரசு சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்திடம் ஆலோசனை செய்யாமல் அணை கட்ட மாட்டோம் என ஆந்திர அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் இப்போது தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல் அணை கட்டுவது தொடர்பான டெண்டரை விட நடவடிக்கை எடுத்துள்ளது.
இரு மாநிலங்களுக்கும் இடையே பாலாறு ஓடுகிறது. எனவே தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் ஆந்திர அரசு தன்னிச்சையாக அணை கட்ட முடியாது.
வேலூர், காஞ்சிபுரம், சென்னை நகரம் ஆகிய மாவட்டங்களின் ஒரே குடிநீர் ஆதாரம், விவசாய ஆதாரம் பாலாறுதான். எனவே ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று சித்தூர் மாவட்டத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி,
நான் இன்னும் 2 மாதங்களில் இங்கு மீண்டும் வருவேன். அப்போது பாலாறு அணைக்கு அடிக்கல் நாட்டுவேன். ரூ. 50 கோடி மதிப்பிலான இத் திட்டத்துக்கு டெண்டர்கள் விடப்பட்டுவிட்டன என்றார்.
அதே நேரத்தில் பாலாற்றில் அணை கட்ட மாட்டோம் என தமிழக அரசிடம் ஆந்திரம் தொடர்ந்து உறுதிெமாழி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications