தூத்துக்குடி: பஸ்-கார் மோதலில் 4 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் ெகாண்டதில், 4 பேர் பலியானார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது கோட்டையில் கட்டபொம்மன் வாரிசுகள் உள்ளிட்ேடார் விழா எடுத்து வழிபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக ஜக்கம்மா கோவிலில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது. மதுரையைச் சேர்ந்த சிலர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள காரில் சென்றுகொண்டிருந்தனர்.
எட்டயபுரம் அருகே வந்தபோது திருப்பூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கார் மீது பலமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி போலீஸார் விரைந்து காயம் அடைந்தவர்களை அருப்புகோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்












Click it and Unblock the Notifications