For Daily Alerts
Just In
மதுரை வன்முறை: மேலும் 2 பேர் கைது
மதுரை:மதுரையில் தினகரன், சன் டிவி அலுவலகங்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக அழகிரின் அடியாளான அட்டாக் பாண்டி என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் தலைமறைவாக இருந்த மதுரை கீரைத்துறையை சேர்ந்த இருளாண்டி(37), திருச்செல்வம் ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
இவர்களை மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments
arrest கைது மதுரை tamil nadu violence thatstamil tamilnadu போலீஸார் tamil news தனிப்படை local body election tn political
Story first published: Thursday, May 17, 2007, 5:30 [IST]