திருடர்கள் சுட்டு சபாநாயகரின் உறவினர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: திருட்டுக் கும்பல் வீடு புகுந்து சுட்டதில், சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உறவினர் பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசித்து வந்தவர் ஆனந்த் (60). இவர் ஆவுடையப்பனின் உறவினர் ஆவார்.
கடந்த வாரம் ஆனந்தும், அவரது மனைவியும் வீட்டிலிருந்தபோது மர்ம கும்பல் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வீட்டிற்கு நுழைந்து, அவர்களை அரிவாளால் சராமாரியாக தாக்கியது. பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது.
காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.












Click it and Unblock the Notifications