மக்கள் தான் முக்கியம், தீவிரவாதம் அல்ல-முஷாரப்
பாகிஸ்தான்: நாட்டின் கெளரவமும், மக்களின் நலமும் தான் எனக்கு முக்கியம். பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்கு இடமே இல்லை அந் நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
இஸ்லாமபாத்தில் லால் மசூதியை தீவிரவாதிகளிடமிருந்து மீட்க பாகிஸ்தான் ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதில் மதகுரு உட்பட பல தீவிரவாதிகளும், அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அல்-கொய்தா அமைப்பு கலவரத்தை தூண்டும் வகையில் உசுப்பேற்றி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பல இடங்களில் தற்கொலை தாக்குதல்கள நடந்து வருகின்றன.
இதுகுறித்து முஷாரப் கூறுகையில்,
இஸ்லாமிய நாடான இங்கு சில தீவிரவாத சக்திகள் இஸ்லாமியர்களை தவறான வழியில் அழைத்து செல்கின்றன. நாம் இஸ்லாமின் உண்மையான கருத்துக்களை பின்பற்றி வாழ்ந்து வருகிறோம். தாங்கள் தான் இஸ்லாமியர்கள் என சொல்லிக்கொண்டு பலர் மதத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்ப முயற்சி செய்கிறார்கள்.
லால் மசூதி மீட்கப்பட்டதில் யாருக்கும் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. தீவிரவாதத்தை ஒழிக்கவே இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசு லால் மசூதி நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக சொல்லி மக்களை தீவிரவாதிகள் தூண்டி விட்டு வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications