ரூ1373 கோடியில் செங்கல்பட்டில் எரிசக்தி தொழிற்சாலை
சென்னை:செங்கல்பட்டில் ரூ. 1,373 கோடி முதலீட்டில் எரிசக்தி தொழில் மண்டலம் அமைக்க கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல கமலா குழுமம் மற்றும் எம்.பி.பி.எல் என்ற நிறுவனமும் இணைந்து இந்த மண்டலத்தை உருவாக்கவுள்ளன.
இதில் உயிரி கொதிகலன்கள், டைஜஸ்டர்கள், உயிரி எரிவாயு உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் கார்பன் பேட்டரி என எரிசக்திக்குத் தேவையான பல ஹை-டெக் பொருட்கள் தயாரிக்கபடவுள்ளன.
ரூ.900 கோடியில் இந்த தொழில் மண்டலம் அமைக்கிறது.
மேலும் ரூ.473 கோடி முதலீட்டில் எரிபொருள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத் தொழில் மையம் மூலம் சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 10,000 பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 215 ஏக்கரில் இந்த எரிசக்தி தொழில் மையம் அமையவுள்ளது. 2008ம் ஆண்டில் இந்த தொழில் மையம் செயல்பட ஆரம்பிக்கும்.
இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், எம்.பி.பி.எல். நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே இன்று கையெழுத்தானது.












Click it and Unblock the Notifications